சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
19

சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக  1700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட  ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் இடம்பெற்றது.

 

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக முற்பகல் 11 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.

 

 இந்த ஆர்ப்பாட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் A.P.சக்திவேல் உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.

 

மலையகப் பகுதிகளிலிருந்து தோட்டத்தொழிலாளர்கள் கொழும்பிற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

 

அனைவரும் கறுப்பு பட்டியணிந்து பதாகைகளை ஏந்திய வண்ணம் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக செய்தியாளர் தெரிவித்தார். 

views

11 Views

Comments

arrow-up