சுதந்திரக் கட்சியின் தவிசாளராக செயற்பட மைத்திரிபால சிறிசேனவிற்கு பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீடிப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
19

சுதந்திரக் கட்சியின் தவிசாளராக செயற்பட மைத்திரிபால சிறிசேனவிற்கு பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீடிப்பு

சுதந்திரக் கட்சியின் தவிசாளராக செயற்பட மைத்திரிபால சிறிசேனவிற்கு பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக செயற்படுவதைத் தடுத்து  பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவை எதிர்வரும் ஒகஸ்ட் முதலாம் திகதி வரை தொடர்ந்தும் நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பிற்கமைய, மைத்திரிபால சிறிசேன, கட்சியின் தவிசாளராக செயற்படுவதற்கு எவ்வித சட்ட ரீதியான உரிமையும் இல்லை என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

எனவே, அவர் அந்தப் பதவியை வகிப்பதை தடுத்து உத்தரவு பிறப்பிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தமது மனுவில் கோரியிருந்தார். 

views

183 Views

Comments

arrow-up