மாத்தறையில் துப்பாக்கிப் பிரயோகம் - 2 இளைஞர்கள் பலி

மாத்தறை தெவிநுவர - சிங்ஹாசன வீதியில் நேற்றிரவு(21) 11.45 அளவில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதுடன் இதில் 2 இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
தெவிநுவர பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 29 வயதான இளைஞர்கள் இருவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இருவரும் மோட்டார் சைக்களில் பயணித்துக்கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கந்தர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
37 Views
Comments