கொழும்பு ரோயல் - கல்கிசை பரி தோமாவின் கல்லூரி அணிகளுக்கு இடையிலான நீல வர்ணங்களின் மோதல் இன்று(07) ஆரம்பம்
கொழும்பு ரோயல் மற்றும் கல்கிசை பரி தோமாவின் கல்லூரி அணிகளுக்கு இடையிலான நீல வர்ணங்களின் மோதல் இன்று(07) ஆரம்பமானது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் கல்கிசை பரி தோமாவின் கல்லூரி அணி மதிய போசனத்திற்காக ஆட்டம் இடைநிறுத்தப்படும் போது ஒரு விக்கெட் இழப்புக்கு 97 ஓட்டங்களை பெற்றிருந்தது.
நீல வர்ணங்களின் மோதல் வருடாந்த மாபெறும் கிரிக்கெட் போட்டி கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறுகிறது.
நீல வர்ணங்களின் மோதல் இவ்வருடம் 145 ஆண்டாக நடைபெறுகிறது.
1879ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இந்த கிரிக்கெட் தொடர் உலகின் மிகவும் பழமையான பாடசாலைகளுக்கு இடையிலான இரண்டாவது மாபெரும் கிரிக்கெட் போட்டியாக அமைந்துள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு ரோயல் கல்லூரி அணித்தலைவர் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.
சேனாதி புலத்குலம மற்றும் சதெவ் சொய்சா ஆகியோர் கல்கிசை பரி தோமாவின் கல்லூரி அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர்.
37 Views
Comments