கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமையை கண்டறிந்துள்ள இலங்கை ஆய்வாளர்கள்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
27

கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமையை கண்டறிந்துள்ள இலங்கை ஆய்வாளர்கள்

கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமையை கண்டறிந்துள்ள இலங்கை ஆய்வாளர்கள்

கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. 

 

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். 

 

பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்தார். 

 

புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும் எனவும் அவர் கூறினார். 

 

கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

 

சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும்.  இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும்.

views

239 Views

Comments

arrow-up