இன்றைய வானிலை...
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
AUG
25

இன்றைய வானிலை...

இன்றைய வானிலை...

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்றும் (25) மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில். 50 மி.மீக்கும் மேற்பட்ட கனமழை பெய்யும் சாத்தியம்.

 

வடமேல் மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

 

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் ஒரு சில இடங்களில் மதியம் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

 

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் ஏற்படும் அபாயத்தை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

source:adaderana

views

123 Views

Comments

arrow-up