ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் கொரோனா தொற்றுள்ள 200 குழந்தைகளுக்கு சிகிச்சை...
தற்போது லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் கொரோனா தொற்று உள்ள சுமார் 200 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக அதன் அறுவை சிகிச்சை பிரிவின் தலைவர் வைத்தியர் நளின் சி.கித்துலவத்த கூறுகிறார்
மருத்துவமனையில் கொரோனா தொற்றுள்ள 6 குழந்தைகளுக்கு மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவு வசதிகள் இருந்தாலும், தற்போது 7 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக வைத்திய நிபுணர் நளின் சி.கிதுலாவத்த குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 14 குழந்தைகள் இதுவரை உயிரிழந்துள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
source:newsfirst
113 Views
Comments