மனித உரிமைகள் பேரவையின் தலைவருடன் வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாடல்
மனித உரிமைகள் பேரவையின் 50ஆவது அமர்வில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உரையாற்றினார். அவர் மனித உரிமைகள் பேரவையின் தலைவர், அணிசேரா இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஜெனிவாவில் பிரேசில் நிரந்தரப் பிரதிநிதி ஆகியோரைச் சந்தித்துள்ளார்.
மனித உரிமைகள் பேரவையின் தலைவரும் அர்ஜென்டினாவிற்கான நிரந்தரப் பிரதிநிதியுமான ஃபெடரிகோ வில்லேகாஸ் உடனான சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய சமூக-பொருளாதார நிலைமை மற்றும் இது தொடர்பில் சர்வதேச சமூகம் கொண்டிருக்க வேண்டிய உணர்திறன் மற்றும் புரிதல் குறித்து வெளிவிவகார அமைச்சர் பார்வையாளர்களுக்கு விளக்கினார்.
தற்போதைய சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளை கையாள்வதற்கு பொருத்தமான இடம் நாட்டிற்கு தேவை என அமைச்சர் வலியுறுத்தினார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்கள், அரசியலமைப்புத் திருத்தங்கள், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 21ஆவது திருத்தம் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை பலப்படுத்துதல் ஆகியன இக்கலந்துரையாடலில் இடம்பெற்றன.
இலங்கையில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம் மற்றும் சிவில் சமூகத்துடன் அதன் ஈடுபாடு உட்பட போதுமான மற்றும் உண்மையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் தலைவர் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு நாடும் தனது வரலாற்றில் கடினமான காலகட்டங்களை கடந்து வருவதாகவும், அந்த நாடுகளுக்கு குறிப்பிட்ட அணுகுமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
373 Views
Comments