விடுமுறையின்றி வெளிநாடு சென்ற இராணுவ உறுப்பினர்களுக்கான அறிவித்தல்..
தற்போது விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காமல் வெளிநாட்டில் இருக்கும் இராணுவ உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது மன்னிப்புக் காலம் டிசம்பர் 15 முதல் 31 வரை அமலில் இருக்கும்.
இந்த வருடம் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத இராணுவ உறுப்பினர்களுக்கு மாத்திரமே இந்த பொது மன்னிப்புக் காலம் வழங்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்காக சட்டவிரோதமான முறையில் வெளிநாடு சென்றவர்கள் அல்லது வெளிநாட்டுக்கு செல்லும் போது கடவுச்சீட்டு மற்றும் ஏனைய ஆவணங்களை தயாரித்து மோசடி செய்தவர்கள் வெளிநாடு செல்லவில்லை என்பதை குடிவரவு குடியகல்வு திணைக்களம் உறுதிப்படுத்த வேண்டும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
101 Views
Comments