கொரோனா நோய்த்தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்க 28 ஆயுர்வேத வைத்தியசாலைகளைப் பெறுவதற்கான நடவடிக்கைகள்
கொரோனா நோய்த்தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்க 28 உள்ளூர் ஆயுர்வேத வைத்தியசாலைகளைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சுதேச சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சின் செயலாளர் கீதாமணி கருணாரத்ன மத்திய அரசால் நிர்வகிக்கப்படுகின்ற அம்பாந்தோட்டை, நாவின்ன, யாழ்ப்பாணம் - கைத்தடி மற்றும் பொரளையில் நான்கு ஆயுர்வேத வைத்தியசாலைகள் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க 24 மாகாண வைத்தியசாலைகள் அமைக்கப்பட இருக்கின்றன.
இந்த வைத்தியசாலைகளில் சுமார் 2,500 நோயாளிகளுக்கு வசதிகள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
source:newsfirst
177 Views
Comments