JUN
16
சட்டவிரோதமாக தேங்காய் பறித்த நபர் நில உரிமையாளரால் சுடப்பட்டார்
கொச்சிக்கடை - எத்கல - கேரம் தோட்டப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் தேங்காய் பறித்த நபர் நில உரிமையாளரால் சுடப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த நபர் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (15) பிற்பகல் தென்னை காணியில் இருந்த குறித்த நபரை உரிமையாளர் போர் 12 ரக துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
கொச்சிக்கடை பொலிஸாரிடம் துப்பாக்கியை ஒப்படைத்த நில உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
72 Views
Comments