வெளிநாட்டு நாணயங்களுடன் நால்வர் கைது!
1869,000 ரூபா மற்றும் 400,000 ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணய கையிருப்புடன் நான்கு சந்தேக நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) புறக்கோட்டை உட்பட மூன்று பிரதேசங்களில் வைத்து கைது செய்துள்ளனர்.
நேற்று (16) கொழும்பு 11 பகுதியில் உள்ள டெனட் மால், மாளிகாவத்தை, நுரானியா சந்தி மற்றும் மூன்று தங்க நகை விற்பனை நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த பணம் கண்டுபிடிக்கப்பட்டதாக STF தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு நாணயங்களில் 9 அமெரிக்க டொலர் 100 நோட்டுகள், 16 இந்திய 10 ரூபாய் நோட்டுகள் மற்றும் 7 குவைத் தினார் நோட்டுகள் என பொலிசார் தெரிவித்தனர்.
வெளிநாட்டு நாணயங்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வெள்ளவத்தை, மருதானை மற்றும் புதுக்கடை பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.
75 Views
Comments