மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்தின் தடை முடிவுக்கு வந்துள்ளது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
17

மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்தின் தடை முடிவுக்கு வந்துள்ளது

மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்தின் தடை முடிவுக்கு வந்துள்ளது

போராட்டம் காரணமாக தடைப்பட்டிருந்த மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்திற்கான அணுகு பாதை தற்போது புனரமைக்கப்பட்டுள்ளது.

 

எரிபொருள் கிடைக்காத பஸ் ஊழியர்கள் இன்று (17) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இலங்கை போக்குவரத்து சபை அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பஸ்களுக்கு மாகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்திலிருந்து எவ்வித பிரச்சினையும் இன்றி எரிபொருளை வழங்கும் என அவர்கள் தெரிவித்தனர்.

 

ஆனால், அதற்கான வசதிகள் இல்லாததால், சாதாரண பஸ்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

 

விரைவு பஸ்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் வசதியை சாதாரண பஸ்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) அதிகாரி ஒருவர், சாதாரண பஸ்களுக்கும் எரிபொருளை விநியோகிக்கும் அமைப்பை ஏற்படுத்துவதாக உறுதியளித்தார்.

views

93 Views

Comments

arrow-up