கந்தகாடு மோதலின் போது தப்பியோடிய மேலும் 9 கைதிகள் கைது..
வெலிகந்த, கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற மோதலின் போது தப்பிச் சென்ற மேலும் 9 கைதிகள் சேருநுவர மகிந்தபுர மற்றும் புலஸ்திகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஹிந்தபுர பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட 5 கைதிகளும் மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற மோதலின் போது தப்பிச் சென்ற மற்றுமொரு கைதி சேருநுவர நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
புலஸ்திகம பிரதேசத்தில் தப்பிச் சென்ற மேலும் 3 கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற மோதலின் போது தப்பிச் சென்ற ஏனைய சந்தேக நபர்களை கைது செய்ய பொலன்னறுவை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
91 Views
Comments