தெகிவளை மிருகக்காட்சிசாலையில் நோய்வாய்ப்பட்ட சிங்கத்திற்கு கொரோனா தொற்றா?
தெகிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் சிங்கமொன்று கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக வனவிலங்கு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க கூறியுள்ளார்.
சிங்கத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான இரண்டு முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், கொரோனா அறிகுறிகள் இருப்பதால், சிங்கம் தனிமைப்படுத்தப்பட்டு, இந்தியாவின் உதவியுடன் அதற்கு சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விமலவீர திஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.
source:newsfirst
198 Views
Comments