மினுவாங்கொடை கொலையின் பிரதான சந்தேக நபர் கைது!
மினுவாங்கொடை 3 கொலைகளின் பிரதான சந்தேகநபர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் பதவிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் பதவிய 18 கணுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஜயகொடகே சஞ்சீவ டோன சஞ்சீவ லக்மால் கோட்டை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் ஆவார்.
கொலைச் சம்பவத்தின் பின்னர், அவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றிருந்த நிலையில், சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியைக் கோரி பொலிஸார் முன்னதாக அறிவித்தல் விடுத்திருந்தனர்.
84 Views
Comments