JUN
16
எரிவாயுவிற்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம்
தற்போது அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிவாயு இருப்பு உள்ளதால், எரிவாயு சிலிண்டர்களைப் பெற வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ தெரிவித்துள்ளது.
கடந்த 14ஆம் திகதி இறக்கப்பட்ட எரிவாயு கையிருப்பு தகனம், மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே விநியோகிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், அந்த கையிருப்புக்கள் தீர்ந்த பின்னர் இதுவரை புதிய எரிவாயு கொள்வனவுக்கான உத்தரவு எதுவும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
87 Views
Comments