இன்று முதல் புதிய பாடசாலை பேருந்து சேவை
இன்று (15) முதல் 21 புதிய பாடசாலை பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, கொழும்பு நகருக்கான அனைத்து அணுகு சாலைகளிலும் இன்று முதல் இந்த பேருந்து சேவை அமுலுக்கு வரும் வகையில் இயங்கும்.
காலை 5.30 மணிக்கு ஆரம்பிக்கப்படும் இந்த பேருந்து சேவையானது கொழும்பிற்கு அருகில் உள்ள அதிகளவான பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றிச் செல்லும்.
தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக பொதுப் போக்குவரத்து சேவை துண்டிக்கப்படுவதால் மாணவர்கள் பாடசாலைக்கு வருவதில் ஏற்படும் இடையூறுகள் மற்றும் தாமதங்களை தவிர்ப்பதே இந்த புதிய சேவையின் நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய அமைச்சரவை முடிவுகளை அறிவித்த போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, பாடசாலைகளுக்கு வருகை தருவதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை நிவர்த்தி செய்யும் வகையில் போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தமது அமைச்சு கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
447 Views
Comments