அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம் என நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு ஆலோசனை
உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம் என்று வாழ்க்கை செலவுக் குழு நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு தெரிவித்துள்ளது.நேற்று (9) பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற வாழ்க்கைச் செலவுக் குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க அனுமதி கோரியிருந்தது.
எவ்வாறாயினும், இந்த கடினமான நேரத்தில் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம் என்றும் மாற்று வழிகளைக் காணவும் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
source:newsfirst
210 Views
Comments