கொட்டாவ - மாகும்புர வீதி தடைப்பட்டுள்ளது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
17

கொட்டாவ - மாகும்புர வீதி தடைப்பட்டுள்ளது

கொட்டாவ - மாகும்புர வீதி தடைப்பட்டுள்ளது

எரிபொருள் கோரி பேரூந்து ஊழியர்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் காரணமாக கொட்டாவ - மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையம் முற்றாக மூடப்பட்டுள்ளது.

 

நாட்டில் நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் நாளுக்கு நாள் இவ்வாறான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை கூட வெற்றிகரமாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, இதனால் பிரதான வீதிகளில் கூட பொதுப் போக்குவரத்து சேவைகள் துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

இதனால் அரச மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

 

இவ்வாறானதொரு பின்னணியிலேயே இந்திய கடன் திட்டத்தின் கீழ் நேற்று (16) இலங்கை வந்தடைந்த கடைசி டீசல் கப்பலும் வந்துள்ளது.

views

84 Views

Comments

arrow-up