தற்போதைய பயணக் கட்டுப்பாடுகள் இந்த மாதம் 21 ஆம் திகதி நீக்கப்படும்
தற்போதைய பயணக் கட்டுப்பாடுகள் இந்த மாதம் 21 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் இந்த மாதம் 23 ஆம் திகதி இரவு 10 மணிக்கு விதிக்கப்படும் என்று ராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, 23 ஆம் திகதி இரவு 10 மணிக்கு விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
இந்த மாதம் 21 ஆம் திகதி காலையில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருந்தாலும், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் ஒன்று கூடும் பொதுக் கூட்டங்கள், திருவிழாக்கள் மற்றும் களியாட்ட நிகழ்வு தொடர்ந்தும் தடை செய்யப்பட்டுள்ளன.
source:hirunews
209 Views
Comments