ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வெள்ளத்தால் பாதிப்பு!
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் அவசரகால நிலையை அவசரகால சேவைகள் அமைச்சர் ஸ்டெபானி குக் அறிவித்துள்ளார்.
அவர் இந்த நிலை மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றார்.
கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர்.
சிட்னியின் சில பகுதிகளில் இதுவரை சுமார் 350 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக அவுஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
84 Views
Comments