ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான தேனீக்கள் தேன்கூடுகளில் சிறை வைக்கப்பட்டுள்ளன
அதிக தீங்கு விளைவிக்கும் ஒட்டுண்ணியின் பரவல் காரணமாக ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான தேனீக்களை சிறைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒட்டுண்ணி முதலில் சிட்னி துறைமுகத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது, அதன் பின்னர் 100 கிமீ தொலைவில் உள்ள பகுதியில் தேனீக்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒட்டுண்ணியால் பாதிக்கப்பட்ட தேனீக்களை அழிக்கவும், தேனீக் கூட்டங்களில் ஆரோக்கியமான தேனீக்களை அடைத்து வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் தேன் தொழிலுக்கு இது கசப்பான காலமாக அமையும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த பேரழிவு உலகளாவிய தேனீ வளர்ப்பிற்கும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
88 Views
Comments