இன்று முதல் 3 மாவட்டங்களில் ஒரு நாள் கடவுச்சீட்டு சேவை...
மாத்தறை, வவுனியா மற்றும் கண்டி மாவட்ட மக்களுக்கான ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் பணி இன்று (04) முதல் பிராந்திய அலுவலகங்களில் இடம்பெறவுள்ளதால் கொழும்புக்கு வர வேண்டிய அவசியமில்லை என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் முதற்கட்டமாக ஒவ்வொரு பிராந்திய அலுவலகத்திற்கும் ஒரு நாளையும் நேரத்தையும் முன்பதிவு செய்துள்ள 100 விண்ணப்பதாரர்களுக்கு ஒரு நாள் சேவை வசதிகள் வழங்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
www.immigration.gov.lk வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம், சம்பந்தப்பட்ட பிராந்திய அலுவலகங்களுக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கு நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும்.
எதிர்வரும் 11ஆம் திகதி முதல் குருநாகல் மாவட்டத்திற்கும் ஒரு நாள் சேவை வசதிகளின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
76 Views
Comments