மின்சார சபையின் இரு செயற்பாடுகளுக்கு எதிராக விசாரணைகள்
மின்சார சபையின் தொழிற்சங்க நடவடிக்கை மற்றும் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய போதும் எரிபொருள் மின் நிலையங்கள் இயக்கப்பட்ட இரண்டு சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (04) டுவிட்டர் செய்தியில் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி கடந்த ஜூன் மாதம் 9ஆம் திகதி மின்சார சபையின் தொழிற்சங்க நடவடிக்கையினால் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
அத்துடன், நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய போதும் 320 மில்லியன் ரூபாவை எரிபொருள் ஆலைகளை இயக்குவதற்கு செலவிடப்பட்ட சம்பவம் தொடர்பிலும் விசாரணை நடத்தப்படவுள்ளது.
44 Views
Comments