முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பல கட்சிப் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று பிற்பகல் நடைபெற்றது.
தேசிய சீர்திருத்தம் மற்றும் முன்னேற்ற வேலைத்திட்டம் தொடர்பில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அதற்காக ஐக்கிய மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார, பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சி. வி. விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த சந்திப்பில், புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் சர்வ கட்சி ஆட்சியை அமைப்பது குறித்தும் இரு தரப்பும் விவாதித்துள்ளன.
63 Views
Comments