மீன் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது குழந்தை பலி
பன்வில மடுல்கெலே பிரதேசத்தில் வீடொன்றுக்கு முன்னால் உள்ள மீன் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
தாய் தனது குழந்தையுடன் வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த போது குழந்தை விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறு குழந்தைகளுடன் விளையாடும் போது, பெற்றோர்கள் அவர்களின் சுற்றுப்புறம் குறித்து அவதானமாக இருக்க வேண்டும் எனவும், இதனால் அவர்கள் இவ்வாறான துயர சம்பவங்களுக்கு ஆளாகாமல் இருக்க முடியும் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.
பிள்ளைகளின் அன்றாட நடவடிக்கைகளில் பெற்றோர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
97 Views
Comments