தொழில்முறை தூதர்கள் 12 பேர் சேவைக்கு..
நாட்டில் வெளிநாட்டு சேவையை பழையதாக்கவோ அல்லது ஓய்வு பெற்ற பின்னர் வெளிநாட்டு பயணங்களில் ஈடுபட்டு குடும்ப பிரச்சனைகளை பேசும் இடமாக மாற்றவோ தான் தயாராக இல்லை என வெளிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலத்தில் முழு வெளிநாட்டு சேவையையும் தொழில்சார் நிலைக்கு கொண்டு வருவதே தமது ஒரே இலக்கு எனவும் அதற்கான அடிப்படை நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வரலாற்றில் முதல் தடவையாக வெளிவிவகார அமைச்சு வெளிவிவகார அமைச்சு 12 வெளிநாடுகளுக்கான தூதுவர் பதவிகளுக்கு 12 சிரேஷ்ட அதிகாரிகளை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
27 Views
Comments