SEP
13
அஜித் நிவர்ட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்
15 ஆம் திகதி செப்டம்பர் 2021 முதல் அஜித் நிவர்ட் கப்ராலை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அஜித் நிவர்ட் கப்ரால் 15 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகப் பொறுப்பேற்க உள்ளார்.
அவர் சிரேஷ்ட பட்டய கணக்காளர் மற்றும் அமைச்சின் முன்னாள் செயலாளராகவும், மத்திய வங்கியின் ஆளுநராகவும் கிட்டத்தட்ட 09 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
121 Views
Comments