அவசரகால விதிமுறைகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கண்காணிப்பு...
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
SEP
13

அவசரகால விதிமுறைகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கண்காணிப்பு...

அவசரகால விதிமுறைகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கண்காணிப்பு...

ஐ.நா மனித உரிமைகள் பேரவை சமீபத்திய அவசர நிலையை நெருக்கமாக கண்காணித்து வருவதாக ஐ.நா. மனித உரிமைகளுக்கான ஆணையாளர் மிச்செல் பெச்லெட் தெரிவித்துள்ளார்.

 

ஜெனீவாவில் இன்று தொடங்கிய ஐநா மனித உரிமைகள் பேரவையின் 48 வது அமர்வில் இலங்கை குறித்த வாய்மொழி அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

உறுப்பு நாடுகளில் விவாதம் நாளை நடைபெற உள்ளது.

views

123 Views

Comments

arrow-up