விமான எரிபொருளை இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அனுமதி
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
29

விமான எரிபொருளை இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அனுமதி

விமான எரிபொருளை இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அனுமதி

விமான எரிபொருளை இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும் இலங்கையில் உள்ள விமான நிறுவனங்கள் மற்றும் எரிபொருள் களஞ்சியசாலைகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

இதுவரை, பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் விமான எரிபொருள் இறக்குமதியில் ஏகபோக உரிமையைக் கொண்டிருந்தது.

 

நடைமுறையில் உள்ள மாற்று விகித டொலர் பிரச்சனை ஜெட் எரிபொருளை இறக்குமதி செய்வதை கடினமாக்கியுள்ளது.

 

சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால், எரிபொருள் கடைகள் அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளன.

 

இது தொடர்பில் அதிகபட்ச உதவிகளை வழங்குமாறு சிவில் விமான போக்குவரத்து அதிகார சபைக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

views

50 Views

Comments

arrow-up