டயானா உள்ளிட்ட 15 பேருக்கு அழைப்பாணை!
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மீளப்பெறுமாறு கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (28) அனுமதி வழங்கியுள்ளது.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ், குடிவரவுக் கட்டுப்பாட்டாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், பாராளுமன்ற செயலாளர் நாயகம், சட்டமா அதிபர் உள்ளிட்ட 15 பேர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய அமர்வு, மேன்முறையீட்டு நீதிமன்றில் உண்மைகளை முன்வைக்குமாறு அழைப்பாணை அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை அடுத்த மாதம் 12ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டதுடன், திருமதி டயானா கமகேயின் குடியுரிமை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உடனடியாக சமர்ப்பிக்குமாறு குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
17 Views
Comments