ஜனாதிபதிக்கும் சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்களுக்கும் இடையிலான அவசர சந்திப்பு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
ஜனாதிபதியின் அழைப்பின் பிரகாரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இந்த கலந்துரையாடலுக்கு வந்துள்ளது.
பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர், அவர்களில் இருவர் அமைச்சரவை அமைச்சர்கள்.
மேலும் 6 பேர் இராஜாங்க அமைச்சர் பதவிகளை வகிப்பதுடன், கட்சியின் தீர்மானத்திற்கு மாறாக அமைச்சுப் பதவிகளைப் பெற்றதாகக் கூறி 8 பேரின் கட்சி உறுப்புரிமையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அண்மையில் இடைநிறுத்தியது.
31 Views
Comments