JUL
04
அத்தியாவசிய பொது சேவைகள் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல்
அத்தியாவசிய அரச சேவைச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் பிரிவு 2 இன் படி, எந்தவொரு அரசாங்க நிறுவனமோ அல்லது அரச திணைக்களமோ அல்லது உள்ளூராட்சி மன்றமோ அல்லது கூட்டுறவுச் சங்கமோ அல்லது மேற்படி சேவைகளின் கீழ் அவற்றின் கிளையோ வழங்கும் சேவைகள் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அவசியமானவை என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
51 Views
Comments