JAN
12
திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகத்தை மாற்றுவதற்கு எதிராக மற்றுமொரு மனு
திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கி வளாகத்தை அபிவிருத்திக்காக இந்திய நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான அமைச்சரவையின் தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு கோரி உச்ச நீதிமன்றில் 47 பேருக்கு எதிரான மற்றுமொரு அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வண.எல்லே குணவன்ச மற்றும் வண.பெங்கமுவே நாலக தேரர்களால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் தேசிய பிக்கு முன்னணியின் செயலாளர் வண.வக்முல்ல உதித்த தேரரும் அண்மையில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
231 Views
Comments