எண்ணெய் விலை 7 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியது
அபுதாபியில் ஆளில்லா விமானத் தாக்குதலைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் எண்ணெய் விநியோகம் குறித்த நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் உலக எண்ணெய் விலை ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று உயர்ந்தது.
அபுதாபி தாக்குதலை தொடர்ந்து ஈரான் மற்றும் சவூதி அரேபியா இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் எண்ணெய் விநியோகம் குறையும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதனால் இன்று ஆசிய சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.92 டொலர்களாக உயர்ந்துள்ளது. அமெரிக்க WTI ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை 84.62 டொலர்களாகும்.
212 Views
Comments