ஜூலை 22 அன்று இலங்கைக்கு வரும் பெட்ரோல்...
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
29

ஜூலை 22 அன்று இலங்கைக்கு வரும் பெட்ரோல்...

ஜூலை 22 அன்று இலங்கைக்கு வரும் பெட்ரோல்...

ஜுலை 22 ஆம் திகதி ஒரு தொகை பெற்றோல் நாட்டிற்கு வரவுள்ளதாக பிரதமர் ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 

அரசாங்கம் எரிபொருள் ஏற்றுமதியை முன்கூட்டியே பெற முயற்சிப்பதாகவும், ஆனால் அவை உறுதிப்படுத்தப்படும் வரை தகவலை வெளியிடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (29) பிற்பகல் பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி மற்றும் வானொலி செய்தியாளர்களை சந்தித்தார்.

 

இதன்போதே நாட்டின் எரிபொருளின் தற்போதைய நிலை குறித்து சாகல ரத்நாயக்க ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.

 

இதேவேளை, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை, எரிபொருள் நெருக்கடியை தீர்ப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள அவசர நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து பிரதமர் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.

 

பொருளாதார நிலை மற்றும் பொருளாதாரம் அடைந்துள்ள ஆபத்தான நிலை குறித்து பிரதமரின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எச். சமரதுங்க விளக்கமளித்துள்ளார்.

views

73 Views

Comments

arrow-up