JUL
04
பாடசாலை மாணவன் தற்கொலை!
அநுராதபுரம் - கலென்பிந்துனுவெவ - கெடலாவ பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் தனது வீட்டிற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த பாடசாலை மாணவன் ஒருவர் நேற்று தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த மாணவனின் தாய் மறுமணம் செய்து கொண்டதன் பின் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் தந்தை உயிரிழந்துள்ளார்.
மாணவன் தனது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்தவன், தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
47 Views
Comments