வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து இலங்கைக்கு மருந்து நன்கொடை..
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கைக்கு வழங்கப்பட்ட மருந்துப் பொருட்கள் அடங்கிய கையிருப்பு இன்று (28) கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டது.
மருந்துகள் தட்டுப்பாடு உள்ள வைத்தியசாலைக்கு உரிய மருந்துப் பொருட்களை விநியோகிக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, வியட்நாம் தூதுவர் ஹோ தாய் தான் ட்ரக், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி, பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஜி. வீரசிங்க மற்றும் அதிகாரிகள் குழு ஒன்று கூடியிருந்தனர்.
31 Views
Comments