பசில் ராஜபக்ஷ மீண்டும் இலங்கை திரும்பியுள்ளார்.
வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் சென்றிருந்த பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவின் தலைவர் பசில் ராஜபக்ஷ இன்று காலை இலங்கைக்கு வந்தார்.
அவர் துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு எமிரேட்ஸ் விமானம் EK650 இல் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
நாட்டிற்கு வந்த பசில் ராஜபக்ஷ, பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சுகாதார அறிவுறுத்தல்களின்படி தனிமைப்படுத்தப்படுவார் என அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.
கடந்த மே 12 அன்றே பசில் ராஜபக்ஷ அமெரிக்கா சென்றிருந்தார்.
source:newsfirst
290 Views
Comments