மட்டக்குளியில் ஒருவர் வெட்டி படுகொலை!
மட்டக்குளி, மேடா வீதி பகுதியில் வீதியில் வைத்து நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
38 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் காரில் இருந்து இறங்கும் போது, பின்னால் மற்றொரு காரில் வந்த இருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கினர்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
33 Views
Comments