நேற்று 147,114 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது
நாட்டில் கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் நேற்று மொத்தம் 47,114 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
அதன்படி, சைனோஃபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 88,700 பேருக்கும், முதல் டோஸ் 51,798 பேருக்கும் வழங்கப்பட்டது.
மேலும், ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் நேற்று 353 பேருக்கும், இரண்டாவது டோஸ் 385 பேருக்கும் வழங்கப்பட்டது.
மொடர்னா தடுப்பூசியின் முதல் டோஸ் 30 பேருக்கும், இரண்டாவது டோஸ் 1,815 பேருக்கும் வழங்கப்பட்டதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் டோஸ் நேற்று 3,194 பேருக்கும், இரண்டாவது டோஸ் 839 பேருக்கும் கொடுக்கப்பட்டது.
அதன்படி, நாட்டில் 1,672,627 பேர் தடுப்பூசியின் இரண்டாவது அளவை முடித்துள்ளனர்.
129 Views
Comments