திடீரென தரையிறங்கிய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம்!
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
28

திடீரென தரையிறங்கிய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம்!

திடீரென தரையிறங்கிய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம்!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் புறப்பட்டு 5 நிமிடங்களில் தரையிறங்கிய சம்பவம் ஒன்று இன்று (28) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதிவாகியுள்ளது.

 

இந்தியாவின் மதுரைக்கு செல்வதற்காக பிற்பகல் 02:02 மணிக்கு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் UL 139 என்ற விமானம் புறப்பட்டு 5 நிமிடங்களில் மீண்டும் தரையிறங்கியதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.

 

தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தரையிறங்கியதாக கூறப்படுகிறது.

 

விமான ஊழியர்களை விமானத்தில் தங்க வைத்து விமானத்தை சரி செய்ய விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

views

40 Views

Comments

arrow-up