பேருந்துகளில் பெண்களின் தலைமுடியை திருடும் வினோத நபர்
பண்டாரவளை ஹீல் ஓயா பிரதேசத்தில் பேருந்துகளில் இரு பள்ளி மாணவிகளின் தலைமுடி வெட்டப்பட்டுள்ளது.
இது குறித்து மாணவி ஒருவர் தனது தந்தையிடம் தெரிவித்ததை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் ஊவா பரணகம பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் பல மாணவிகள் மற்றும் பெண்களின் முடியை வெட்டியுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவரது சூட்கேஸில் வெட்டப்பட்ட முடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் திருமணமானவர் எனவும், பொலிஸாரின் விசாரணையின் போது சந்தேக நபர் ஆசையில் இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
207 Views
Comments