மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவித்தல்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
29

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவித்தல்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திறப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

எரிபொருள் நெருக்கடியை எதிர்நோக்கும் அதிகாரிகளுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எவ்வாறாயினும், வெரஹெர ஓட்டுநர் உரிம அலுவலகம் மற்றும் கம்பஹா மற்றும் அனுராதபுரம் மாவட்ட அலுவலகங்கள் வியாழன் அன்று திறந்திருக்கும்.

 

இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதி சாரதி உரிமம் பெற முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் வாரத்தின் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் வருகை தந்து, குறித்த திகதிகளில் முன்பதிவு குறுஞ்செய்தியை சமர்ப்பிப்பதன் மூலம் உரிய பணிகளை மேற்கொள்ள முடியும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 

சேவைகளில் ஏதேனும் தெளிவு தேவைப்பட்டால், அலுவலக நாட்களில் எங்களைத் தொடர்பு கொள்ளவும். வாடிக்கையாளர்கள் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்குமாறும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

 

வாகனப் பதிவு மற்றும் ஓட்டுநர் உரிமத்தை மாற்றுவதற்கு -070 7 677 877

 

ஓட்டுநர் உரிமத்திற்கு - 070 7 677 977

 

அலுவலக நேரத்திற்குப் பிறகு மேற்கண்ட எண்களுக்கு WhatsApp / Viber / SMS மூலம் விசாரணைகளை அனுப்புமாறு அலுவலகம் மேலும் கேட்டுக்கொள்கிறது.

views

144 Views

Comments

arrow-up