இன்று முதல் வாரத்தில் ஐந்து நாட்கள் தூதரக சேவைகள்...
வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவு இன்று (04) முதல் வாரத்தின் ஐந்து நாட்களும் திறந்திருக்கும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு, அரசாங்க ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைப்பதை கட்டுப்படுத்துவதுடன், வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவைகளை மூன்று நாட்களுக்கு மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எவ்வாறாயினும், தூதரக சேவைக்கான தற்போதைய தேவையை கருத்திற்கொண்டு, அந்த சேவைகளை வழமை போன்று செயற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் அமைந்துள்ள அலுவலகங்களிலும் தூதரக சேவைகள் வழமை போன்று இயங்குகின்றன.
41 Views
Comments