தப்பியோடிய 232 பேர் கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் சரணடைந்துள்ளனர்
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற 232 பேர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று (28) இரவு இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 600 பேர் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தப்பியோடியவர்களை தேடும் பணியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
74 Views
Comments