ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் ஜனாதிபதியின் குற்றச்சாட்டு
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது ஆட்சிக் காலத்தில் இலங்கையை வளமான நாடாக மாற்றிய போதிலும், தற்போதைய ஆட்சி அந்த நிலையை அழித்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
BMICH வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக வந்திருந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நல்லாட்சி ஆட்சிக்காலத்தில் பிரதமர் அலுவலகத்தினால் அமைக்கப்பட்ட ஊழல் ஒழிப்பு குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முன்னாள் ஜனாதிபதி இன்று காலை அழைக்கப்பட்டிருந்தார்.
எவ்வாறாயினும், அவர் ஆணைக்குழுவின் அலுவலகத்திற்குச் செல்லவில்லை, மேலும் விசாரணையாளர்கள் BMICH இன் வளாகத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்தில் அவரிடம் வாக்குமூலங்களைப் பெற்றனர்.
சுமார் 3 மணிநேரம் முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
136 Views
Comments