அமைச்சரின் எரிபொருள் கோரிக்கையை நிராகரித்த IOC...
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JAN
18

அமைச்சரின் எரிபொருள் கோரிக்கையை நிராகரித்த IOC...

அமைச்சரின் எரிபொருள் கோரிக்கையை நிராகரித்த IOC...

இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை வழங்க ஐஓசி நிறுவனம் மறுத்துள்ளது.

 

தற்போதைக்கு மேலதிக எரிபொருள் கையிருப்பு இல்லை என தெரிவித்ததாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த நிறுவனத்தின் அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

 

எவ்வாறாயினும், இன்று பிற்பகல் வரை கொழும்பு துறைமுகத்தில் உள்ள எண்ணெய் தாங்கியில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு தேவையான வசதிகள் கிடைக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.

 

இது தொடர்பில் மத்திய வங்கி ஆளுநருடனும் கலந்துரையாடப்பட்டதாக ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

views

106 Views

Comments

arrow-up