நிதி உதவி வழங்குவதற்கான செயற்திட்டங்கள் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன
உலக வங்கியின் உதவியுடன் இலங்கையில் தற்போது 17 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் Faris Hadad-Zervos, தற்போதைய நெருக்கடியை எதிர்கொள்ள நிதி உதவிகளை வழங்குவதற்காக திட்டங்கள் மறுவடிவமைப்பு செய்யப்படுவதாக கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு ஏற்பட்டதன் பின்னர் உலக வங்கி தொடர்ந்து ஆதரவளிக்க எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
இன்று (29) பிற்பகல் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
73 Views
Comments